ராஜாமகள் @ விமர்சனம்

ஆடுகளம் முருக தாஸ், பேபி பிரதிக்ஷா, வெலினா,  பக்ஸ் நடிப்பில் ஹென்றி எழுதி இயக்கி இருக்கும் படம். 

 
 செல்போன் சர்வீஸ் கடை வைத்து  பிழைக்கிற ,  மகள் ( பிரதிக்ஷா) அதிகப் பாசம் கொண்ட  தகப்பனுக்கு (முருகதாஸ்)  மகள் என்ன கேட்டாலும் மறுக்க மனம் வராது.. குழந்தைக்கு யதார்த்தம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று மனைவி (வெலினா) சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை . 
 
பள்ளியில் உடன் படிக்கும் பணக்கார சிறுவனுக்கும் , மகளுக்குமான ஏட்டிக்குப் போட்டி சண்டையில்,  அவனது பிறந்த நாள் விழாவுக்கு அவனது வீட்டுக்குப் போகும் மகள், திரும்பி  வந்ததும் அவனுக்கு இருப்பதைப் போலவே பல கோடி மதிப்புள்ள  வீடு வாங்க  வேண்டும் என்கிறாள் . 
அது முடியாது என்று மகளிடம் சொல்ல மனம் வராமல் , வாங்கித் தருகிறேன் என்று தகப்பன் அடுத்தடுத்து  பொய்கள் சொல்ல, ஒரு நிலையில் தள்ளிப்போவது தாங்க முடியாமல் மகளுக்கு  உடல் நிலை சரி இல்லாமல் போக , அதற்குப் பிறகு முடியாது என்ற வார்த்தையை மகளிடம் சொல்ல முடியாமல் தந்தை பொய்களையேதொடர, கடைசியில் என்ன ஆனது என்பதே படம். 
 
ஒரு எளிய குடும்பத்தையும் , அந்தச் சூழலையும் அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர்  ஹென்றி. .  முருகதாஸ்,  வெலினா,, பக்ஸ் ஆகியோர் மிக இயல்பாக அருமையாக நடித்துள்ளனர் . சிறுமி பிரதிக்ஷா பிரம்மிப்பூட்டும்படி அற்புதமாக நடித்துள்ளார் . 
 
சில பேர் கேட்டால் அவர்கள் என்ன கேட்டாலும் இல்லை என்றே சொல்ல முடியாது என்ற சூழலை மனிதர்கள் பலரும் சந்தித்து இருப்போம் . அப்படி ஒரு சூழலை  , வசனம், தொனி, நடிப்பு, இயக்கம் இவற்றின் மூலம் அற்புதமாக உருவாக்குகிறது  முருக தாஸ், பேபி பிரதிக்ஷா,  ஹென்றி கூட்டணி .சபாஷ் .  அதுவும் பக்ஸ் கதாபாத்திரத்தை சிறுமி தன் பக்கம் இழுக்கும் காட்சி எல்லாம் அபாரம் . 
 
ஆனால் ஒரு நிலைக்கு மேல் அதே நிலை தொடர்வது இதை யதார்த்தம் இல்லாத சினிமாவாக மாற்றி விட்டது . . மழைக் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால்  ஜன்னி வந்து விடும் என்ற உடல் நிலையில் உள்ள குழந்தை ஐஸ்கிரீம் கேட்டால் வாங்கித் தருவது பாசமா ? மறுப்பது பாசமா என்ற கேள்வியில் இருக்கிறது இந்தப் படத்தில் வரும் அப்பா கேரக்டரின் யதார்த்தம் . 
 
ஒரு நிலையில்,சொல்லக் கூடாத கதையைப் பார்த்துக் கொண்டு இருகிறோமோ என்ற என்ன கூட ஏற்படுகிறது . . ஆனால் கிளைமாக்சில் போராடி முயன்று படத்தைக் காப்பாற்றி விட்டார்கள் . ஒரு நெகிழ்வான படமாக முடிகிறது இந்தப் படம். 
வித்தியாச செல்பி எடுக்க  வேண்டும் என்று  வம்படியாக  தேவை இன்றி  மலை உச்சிக்குப் போய் அங்கிருந்து வழுக்கி விழுந்தவன் , தரையில் மோதிச் சிதறுவதற்கு சற்று முன்பு சரியாக ஒரு மரக் கிளையைப் பற்றி சிறு காயங்களோடு தப்பினான் என்றால்…. அவனைப் பாராட்டுவோமா? திட்டுவோமா?
 
அப்படிதான்  இருக்கிறது ராஜா மகள் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *