ராயல் சல்யூட் @ விமர்சனம்

மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்க, பிரதீப், அர்ச்சனா சிங், யுவா யுவராஜ், சுபாஷ் சிம்பு, அமரன் எம் ஜி ஆர், இன்பா , ஜனனி நடிப்பில் ஜெய் சிவ சேகர் எழுதி இயக்கி இருக்கும் படம். 

இந்தியா பாகிஸ்தான் போர். குண்டடி பட்டு உயிருக்குப் போராடும் மேஜர் பல்வீர் சிங்கை (யுவா யுவராஜ்) சுமந்தபடி காப்பற்ற ஓடுகிறான் படைவீரன் சக்திவேல் ( பிரதீப்). 

மேஜர் முழிப்பதும் மயங்குவதுமாக இருக்க, அவரிடம் பேசிக் கொண்டே வருகிறான். ஒரு நிலையில் அவரைக் காப்பாற்றுவது கஷ்டம் என்று எண்ணி விட்டு ஓட, மனசாட்சியின் குரலாகத் தோன்றும் அவனது மனைவி (அர்ச்சனா சிங்) இது நியாயமா என்று கேட்கிறாள் . 

மீண்டும் மேஜரிடம் போகும் படைவீரன், ‘போரில் காயம்பட்ட சக வீரனை உயிரோடு விட்டு வரக் கூடாது என்ற ராணுவ விதியைக்காட்டி மேஜரை சுட முயல்கிறான்  

கண் விழிக்கும் மேஜர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு சாகிறார் . 

அந்த பதட்டத்தில் ஓடும் நாயகன் கண்ணி வெடியில் கால் வைப்பதோடு, பாகிஸ்தானி படை வீரன் ஒருவனிடமும் (சுபாஷ் சிம்பு) சிக்குகிறான் . முதலில் அவனையும் 

வெடியில் சிக்க வைக்க நினைக்கும் நாயகன் அப்புறம் அவன் ஏன் சாக வேண்டும் என்று எண்ணி அவனை எச்சரிக்கிறான் . 

அதில் நெகிழ்ந்த பாகிஸ்தானி கண்ணி வெடியில் இருந்து நாயகனைக் காப்பாற்ற , போர் மற்றும்  தேச எல்லைகளைக் கடந்து இருவருக்கும் இடையில் ஒரு நட்பு முகிழ்க்கிறது . 

யாருமற்ற காட்டில் இருவரும் தங்கள் குடும்பம் பற்றி எல்லாம் பாசத்தோடு பேசிக் கொள்கிறார்கள் .

இந்த நேரத்தில் அவர்களைப் பிடிக்கும் இந்திய ராணுவ அதிகாரி , ‘பாகிஸ்தானியை நாயகனே சுட்டுக் கொல்ல வேண்டும்’ . என்று கட்டளையிடுகிறான். 

கண்ணி வெடியில் இருந்து உயிரைக் காத்த பாகிஸ்தானியை சுட்டுக் கொல்ல நாயகன் மறுக்க, நடந்தது என்னதான் படம் . 

கதை என்று பார்த்தால் ஓகேதான்.தான் . 

   ஒவ்வொரு காட்சியிலும் இரண்டு அல்லது மூன்று பேர்களே இருப்பது , திரைக்கதையில் சில சுவாரஸ்யமான விஷயங்கள், சில இடங்களில் கவனிக்க வைக்கும் வசனங்கள் என்று சிறப்பாக உள்ளன் .

ஆனால் பெரும்பாலும் சுவாரஸ்யம் இல்லாதது, பலவீனமான மேக்கிங் , நாடகத்தனமாகப் பேசும் நடிகையர், திணிக்கப்பட்ட காட்சிகள் இவை எல்லாம் படத்தைப் பின்னோக்கி இழுக்கின்றன . 

எழதத் தெரிந்தவர்களுக்கு எடுக்கத் தெரியவில்லை.

‘பேரு வச்சீங்களே ,, கொஞ்சமாச்சும் சோறு வைக்கக் கூடாதா ?” என்ற நிலையிலேயே படமாக்கல் .

போர் அடிக்கும் காட்சிகள் தவறான மாடுலேஷனில் கேப் விட்டு கேப் விட்டு பேசும் நடிக நடிகையர் என்று படம் போகிறது .

மொத்தத்தில் ராயல் சல்யூட்………ரெட் லேபிள்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *